Posts

Showing posts from September, 2011

என்னுள் நீ

உன்னை நினைக்காத இரவும் உன்னோடு பழகாத பகலும் இனி இல்லை என் வாழ்வில் ஒவ்வொரு சொல்லிலும்  ஒவ்வொரு செயலிலும்  ஒவ்வொரு அசைவிலும்  நீ இருக்கிறாய் பெண்ணே காதல் என்னுள் இவ்வளவு  வியாபித்து என்னை இப்படியாக்கும்  என அறிந்து இருக்கவில்லை  விழி மூடினால் நீ  விழித்தால் நீ  நினைத்தால் நீ நடந்தால் நீ எங்கும் எதிலும் உன் நினைப்பு மரணத்தை விட கொடியது நீ மட்டும் என்னுடன் இல்லை என்றால் 

தற்கொலை

புற்களில் தோன்றும் பனித்துளி  பகலவனை கண்ட உடன்  தற்கொலை செய்துகொள்ளும் விழியோரம் நனைக்கும் கண்ணீர்த்துளி  கவலையின் உச்சத்தை தொட்ட உடன்  தற்கொலை செய்துகொள்ளும்

நிஜமான கனவு

அழகான அந்தி பொழுது  அதை மிஞ்சும்  என்னவளின் அழகை  நான் மட்டும் ரசிக்க  அவளின் விழிகளோ என் ரசிப்பை கண்டு  நாணத்தோடு சிரித்தது  அன்று கொண்ட கனவு  இன்று நிஜத்தில் என் எதிரே நீ உன் எதிரே நான்  தினம் கதைக்க  எதுவும் இல்லை தோணும்   உன்னை காணும் வரை வார்த்தை கடல் போல்  வந்து விழும்  உன்னை கண்ட பின் நீ சொலும் ஒவ்வொரு  சொல்லையும் ரசித்த நான்  உன்னோடு வாழபோகும் அந்த  அழகான வாழ்கையை தினமும்  உயிரோட்டமாய் பார்கிறேன்  என் விழிகளில்   

முகமூடி

பழகிய உள்ளம்  உரிமையோடு பழகாதபோது என்னாலான உன் மீதான  காயம் மாறாதபோது நடந்ததை நினைத்து  நிஜத்தை மறந்தபோது  உள்ளத்து ரணங்களை  வெளிசிரிப்புக்காக மறைக்கும்போ து  முகத்தை முகமூடியில்  தொலைத்து நடிப்பதையே  விரும்பும் உள்ளம்