Posts

நினைவு ஓவியம்

மாற்றங்கள் ஏனடி உன்னுள் விலகி செல்ல ஏனடி நினைத்தாய் உன் தூரம் ஏனடி என்னோடு மட்டும் என் தவிப்பை ஏனடி மறந்தாய்  என் கனவை ஏனடி கலைத்தாய்  பிரிந்த இமை கூட நொடியில் சேர உன் பிரிவு மட்டும் சேராத  தண்டவாளமனது ஏனடி  அழியாத நீல வானம் போல்  உன் நினைவு மட்டும்  கலையாத ஓவியமாய்  என்றும் இதயத்தில் இருக்குமடி

காதல் தீ

கண்கள் மட்டும் உன் முகத்தை சிறை பிடித்து  தினம் கனவில் காதல் கொல்ல மனம் மட்டும் உன்னை கரங்களை சிறை பிடித்து  நிஜத்தில் வாழ துடிக்குதடி நீ என் விரல் தொடும்  தூரத்தில் இருக்கும் போதெல்லாம்  என் மனம் மட்டும்  சப்த்தம் இன்றி  உன் மனதிடம்  என் காதலை சொல்லுவதை  நீ அறிவாயா ? தினம் ஒரு யுகமாய்  வரும் உன் மீதான காதல்  என்னுள் தீயாய் எரியுதடி 

காதலில் விழுந்தேன்

ஊர் உறங்கும் ஜாமத்தில் கூட  அரிதாரம் பூசாத உன்  அழகிய முகம் விம்பமாய் என் மூடிய இமைக்குள் விழுவதேனடி? உன் சில்லறை சிரிப்பு மட்டும் நான் விழிக்கும் வரை  என் செவிகள் கேட்பது ஏனடி? நீ இல்லாத கனவு  எனக்கு மட்டும் நிலவு அமாவாசையாய்  இருப்பதேனடி? அளவில்லா நேசம்  அடைக்கமுடியாத காதல்  என்னை இப்படி பைத்தியமாக்குதடி

மழைத்துளி

மழைத்துளியே இது  உனக்கு பிறப்பா? இறப்பா? நீ வானையும் மண்ணையும்  இணைக்கும் மொழியா? மழையே நீ மேகம்  பொழியும் பன்னீரா? நீ ஏழையின் தாகம்  தீர்க்க வந்த புண்ணியவானா? வெள்ளத்தை உருவாக்க வந்த பாவியா? தெருவோர அனாதையை  குளிப்பாட்டவந்த அருவியா? என்னவள் ரசிக்க வைக்க  வந்த அழகியா? எத்தனை முறை வந்து   நின்றாலும் உலகின் முதல் ஊற்று நீ தான்

ஒற்றை இதயம்

விட்டில் பூச்சி ஒளியைதேடி  பறக்கும் ஒருநாள் வாழ்க்கைக்காக நானோ இருட்டைதேடி போகிறேன்  பலநாள் வாழ்கையை தொலைத்துக்கொள்ள காதலில் விழுந்தேன் விளையாட்டாக வந்த காதல் இல்லை விபரம் அறிந்து வந்த காதல்  உன் இதயத்தோடு வாழ ஆசைப்பட்ட என் இதயம் உன் வார்த்தையால்  ஒற்றை இதயத்தோடு  ஒரு தலைகாதலனாய்  சத்தமின்றி அழுகின்றது

கலைந்த கனவு

என் தூக்கத்தில் பின் ஜாமத்தில்  ஓர் கனவில் நீயும் நானும் கடற்கரையில்  ஓடி வரும் கடல் அலையில் பாதம் நனைக்கையில் உன் உள்ளங்கையில்  என் உதடு முத்தத்தால் கோலமிட  செல்ல சிணுங்கலுடன்  நீ என்னை கிள்ள விழித்து கொண்டது  என் விழிகள்  கனவு கலைந்த சோகத்தோடும்   காதல் கொண்ட சுகத்தோடும் மீண்டும் விழிகளை மூடிக்கொண்டேன் உன்னோடு காதல் கொள்ள

என் மனநிலை

தெரிந்த மாற்றங்கள் சில தெரியாத மாற்றங்கள் பல கண்டேன் உன்னுள்  அறிந்தும் அறியாதவனாய் குழம்பினேன் என்னுள்  நீ என்னோடு பழகிய நினைவுகள்  புகைபடமாய் என் விழி சிமிட்டும் ஒவ்வொரு கணமும் வந்து போகும் ஏன் இப்படி நீ ?  எப்படி மறந்தாய் நீ ? என்ன செய்தேன் நான் உனக்கு ? இன்னும் விடை தெரியாதா  கேள்விகள் வந்து போகும் அவள் என்னை பைத்தியம்  அவள் என்னை முட்டாள்  என திட்ட நானோ அவள் சொல்லும் நிலைக்கு மெல்ல மெல்ல செல்கிறேன் அறியாமல்