Posts

Showing posts from March, 2011

கண்ணீர்

இமை எனும் மூடிய கதவோரத்தில்  மனதை கனமாக்கிய கவலையின் ஈரம் -   கண்ணீர்  

உயிர்

ஈராண்டுக்கு முன்பு என் அருகில் இருந்து என்னை நேசித்த உயிர்  என் கண் முன்பே பிரிந்த போது  என் மனம் பிசைந்தது  என் கன்னத்தை வருடி "வாயா" என்றழைத்த கை மறக்கட்டயான போது  என் மனம் நொறுங்கியது ஈராண்டுக்கு பின்பு அதே நாளில்  புதிய உயிரின் வருகையால்  பிரிவின் துயரத்துக்கு மருந்தாகியது 

காதல் திருட்டு

உன் சிரிப்பை திருடினேனே  அறிவாயா ? உன் நிழலை திருடினேனே  அறிவாயா ? உன் வாசனையை திருடினேனே  அறிவாயா ? உன் மென்மையை திருடினேனே அறிவாயா ? நீ விடும் மூச்சை திருடினேனே அறிவாயா ? உன் மனதை திரிடிகொள்ள உன் அனுமதியை எதிர் பார்த்து  காத்துகிடக்கும் என் மனம் படும் பாட்டை நீ அறிவாயா பெண்ணே ?

தேவைகள்

தேவைகள் இருக்கும் வரை வேண்டப்பட்டவர்கள்  தேவைகள் தீர்ந்த பின் வேண்டபடாதவர்கள்  உன் தேவை இது தான் என்று தெரிந்து இருந்தால் அன்றே நிறுத்தி இருக்கலாம் - நம் உறவை    இன்று நினைக்க மறந்து இருக்கலாம் எல்லாம் சில காலம் மட்டுமே தேவைகள் மாறும்  உறவுகள் மாறும் வாழ்க்கை எனும் பயணத்தில் நிழலாக வரும் உன் நினைவுகள் மட்டுமே மாறது

தவிப்பு

நீ விரல் தொடும் தூரம் இருந்தும் மனம் தொட விரும்பாதது ஏன் உன் இதயம் கவர முடியாதது ஏன்  என் நினைவு உன்னை துரத்தும்  தூரத்தில் இருந்தும் நாம்  நிஜத்தில் சேர முடியாதது ஏன்  உன் மஞ்சத்தில் என் மீதி  வாழ்க்கை முடியாதது ஏன் காலம் கைகூடும் வரை  காத்துக்கிடக்குமா இந்த ஜீவன் உன் பஞ்சு விரலோட  என் விரல் சேர குடுத்துவைக்குமா இந்த ஜீவன்

ஒரு தலை காதல்

நீ விடும் மூச்சு காற்றை  யார் வேணுமானாலும் சுவாசிக்கலாம் நான் விடும் மூச்சு காற்றை நீ மட்டும் சுவாசிக்க வேண்டும் -  ஒரு தலை காதல்