Posts

Showing posts from May, 2011

ஏன் இந்த நிலை

பேசாதவரை இருக்கும் உள்ளம் இரும்பை உன் பேச்சினால் கனிந்தது மெல்ல கரும்பாய் ஏன் இந்த நிலை ஒருபோதும் விரும்பமாட்டாய் என தெரிந்தும்  மேற்கில் சூரியன் உதிப்பதை எதிர்பார்க்கும் மனம் ஏன் இந்த நிலை விடை தெரியாத  மூட மனமே மீண்டும் ஒரு தலை  காதலுக்கான முன்னோட்டமோ ?

என் அம்மா

நடிப்பு இல்லாத அன்பு கபடம் இல்லாத பேச்சு எப்போதும் என்னை நினைக்கும் உள்ளம் எப்போதும் என்னை அழைக்கும் குரல் நீ (ங்கள்)  பிசைந்த  ஒரு வாய் சோற்றின் சுவைக்கு  அறுசுவை எப்போதும் அடிமை உன்னோடு (ங்களோடு)  கொண்ட சண்டைகள் பல இருந்தும் என்னக்கு பிடிச்ச உணவை சமைப்பவள் வெளியில் செல்லும் போது உன்னை (ங்களோடு) தொழ மறந்தது இல்லை  நான் போகும் வரை  நீ (ங்கள்)  வாசலில் நிற்க மறந்தது இல்லை ஈர் ஐந்து மாதம் தூக்கம் தொலைத்து என்னை ஈன்ற என் அம்மா நீ (ங்கள்) தந்த உயிர் போகும் வரை நீ(ங்கள்) தான் என் கடவுள் 

காதல் விதை

வெறுமையான உள்ளத்தில  விதைக்கப்பட்ட விதை நீ   முதலில் வளர மறுத்தாய் பின்பு மெதுவாய் துளிர் விட்டாய் கிளைகளை விரித்து  என் உள்ளத்துக்குள் வியாபித்தாய்  அழகான நிழலாய் என் உள்ளம் குளிர்ந்தது    மலர்களை தூவினாய்  என் உள்ளத்தின் எதிபார்ப்பை கூட்டினாய்  பூ கனியானது  என் எதிர்பார்ப்பு காதலானது   இந்த அழகான மரம் என்  கூடவே இருக்காதா இல்லை ஆணி வேரோடு என் உயிரையும் பிடுங்கி மரிக்காதா