ஏன் இந்த நிலை
பேசாதவரை இருக்கும்
உள்ளம் இரும்பை
உன் பேச்சினால்
கனிந்தது மெல்ல கரும்பாய்
ஏன் இந்த நிலை
ஒருபோதும் விரும்பமாட்டாய்
என தெரிந்தும்
மேற்கில் சூரியன் உதிப்பதை
எதிர்பார்க்கும் மனம்
ஏன் இந்த நிலை
விடை தெரியாத
மூட மனமே
மீண்டும் ஒரு தலை
காதலுக்கான முன்னோட்டமோ ?
Comments
Post a Comment