Posts

Showing posts from November, 2011

நினைவு ஓவியம்

மாற்றங்கள் ஏனடி உன்னுள் விலகி செல்ல ஏனடி நினைத்தாய் உன் தூரம் ஏனடி என்னோடு மட்டும் என் தவிப்பை ஏனடி மறந்தாய்  என் கனவை ஏனடி கலைத்தாய்  பிரிந்த இமை கூட நொடியில் சேர உன் பிரிவு மட்டும் சேராத  தண்டவாளமனது ஏனடி  அழியாத நீல வானம் போல்  உன் நினைவு மட்டும்  கலையாத ஓவியமாய்  என்றும் இதயத்தில் இருக்குமடி

காதல் தீ

கண்கள் மட்டும் உன் முகத்தை சிறை பிடித்து  தினம் கனவில் காதல் கொல்ல மனம் மட்டும் உன்னை கரங்களை சிறை பிடித்து  நிஜத்தில் வாழ துடிக்குதடி நீ என் விரல் தொடும்  தூரத்தில் இருக்கும் போதெல்லாம்  என் மனம் மட்டும்  சப்த்தம் இன்றி  உன் மனதிடம்  என் காதலை சொல்லுவதை  நீ அறிவாயா ? தினம் ஒரு யுகமாய்  வரும் உன் மீதான காதல்  என்னுள் தீயாய் எரியுதடி 

காதலில் விழுந்தேன்

ஊர் உறங்கும் ஜாமத்தில் கூட  அரிதாரம் பூசாத உன்  அழகிய முகம் விம்பமாய் என் மூடிய இமைக்குள் விழுவதேனடி? உன் சில்லறை சிரிப்பு மட்டும் நான் விழிக்கும் வரை  என் செவிகள் கேட்பது ஏனடி? நீ இல்லாத கனவு  எனக்கு மட்டும் நிலவு அமாவாசையாய்  இருப்பதேனடி? அளவில்லா நேசம்  அடைக்கமுடியாத காதல்  என்னை இப்படி பைத்தியமாக்குதடி

மழைத்துளி

மழைத்துளியே இது  உனக்கு பிறப்பா? இறப்பா? நீ வானையும் மண்ணையும்  இணைக்கும் மொழியா? மழையே நீ மேகம்  பொழியும் பன்னீரா? நீ ஏழையின் தாகம்  தீர்க்க வந்த புண்ணியவானா? வெள்ளத்தை உருவாக்க வந்த பாவியா? தெருவோர அனாதையை  குளிப்பாட்டவந்த அருவியா? என்னவள் ரசிக்க வைக்க  வந்த அழகியா? எத்தனை முறை வந்து   நின்றாலும் உலகின் முதல் ஊற்று நீ தான்