Posts

Showing posts from June, 2011

காதல் கொண்டேன்

விண்மீன்கள் விளையாடும் இரவு வேளை மெல்லிய காற்று என் இதயத்துக்குள் ஊடுருவ உன் நினைவுகள் ஒவ்வொன்றாக  என் கண் முன்னாக ஓட  என் உயிர் அணுக்கள் காதலின் உணர்வை  உணர தொடங்கியது  எது சரி எது பிழை என தெரியாமல் நெஞ்சம் உன்னை ஆழமாக நேசிக்க தொடங்கியது சாதாரண இரவு அன்று  என்னை சந்தோசத்தில் சாகடித்தது விழமாட்டேன் என நினைத்து  காதல் வானில் பறந்தேன் இன்றோ ஊணமற்ற முடமாய் கிடக்கிறேன்  கனவு கண்டேன் அது வெறும் கனவுதான் என இரவு காட்டிகொடுத்தது  அன்று இருந்த விண்மீன் இன்று இல்லை அன்று முளைத்த காதல் ?............................. .....

விண்ணப்பம்

என் இதயம் அறியும்  உன்னை விரும்புவது என் உதடு அறியும்  என் வார்த்தைகள்  உன்னை பற்றியே என்று உன் இதயம் அறியும்  என்னை விரும்பவில்லை என்று  உன் உதடு அறியும்  உன் வார்த்தைகள்  என்னை பற்றியே கிடையாது என்று தோழியே என்னை காதலனாக்கிவிடு  என் இறுதி உயிரணு மரணிக்கும் வரை உன்னை காதலிப்பேன் இல்லையேல்  நான் ரசிக்கும் உன்  உள்ளங்கையில் என் கன்னம் சாய்க்க அனுமைதி கொடு உன் உள்ளங்கை வெப்பத்தால்  என் உயிர் வாழட்டும்

பத்தோடு பதினொன்று

பேசிய உள்ளம் பேசாத போது உனக்கென்ன நண்பா  நீ பத்தோடு பதினொன்று  என்பதை ஏன் மறந்தாய் நண்பா அட பைத்தியக்கார ஒரு நாள்  உன் வீட்டு நாய் கூட உன்னை கண்டுகொள்ளாது  உன்னோடு கூட இருப்பது  உன் உயிர் மட்டும் தான் என்பதை எப்போதடா உணர்வாய் நண்பா

துளிகள்

ஈரத்தில் தொடங்கி  ஈரத்தில் முடிவது -  வாழ்க்கை  பிறப்பின் ஓசை அம்மா இறப்பின் ஓசை ஐயோ -  அழுகை  சந்தோசமான துக்கம் -  தனிக்கட்டை  துக்கமான சந்தோசம் -  திருமணம்  என் முடிவு உனது தொடக்கம்  உன் முடிவு எனது தொடக்கம் -   புதிய அத்தியாயம் 

தனிமையின் இரவு

இரவு விளக்குகள்  அணைந்த பின்பு கூட விழிகளின் விளக்குகள்  இன்னும் அணையவில்லை  ஏனடி அன்பே ? விழித்திரையில் உனது விம்பம் மறைய மறுப்பதாலா ? இரவின் நீளம் மாறவில்லை ஆனால் உறக்கத்தின் நீளம் குறைவது  ஏன் அன்பே ? இப்படி விடை தெரியாத கேள்விகளுடன்  தனிமையின் இரவு விடியலை  காணும் வரை நகர்கிறது 

நான் தேடும் முற்றுபுள்ளி

விடை தெரியாத கனவுகள்  விழுங்கப்பட்ட ஆசைகள் துரத்தப்பட்ட விருப்பங்கள்  முற்றுப்புள்ளியை வேகமாய் தேடும் ரணமான உள்ளம் காத்திருப்பேன் முற்றுபெறாத  முற்றுப்புளிக்காக............. ...........