தனிமையின் இரவு
இரவு விளக்குகள்
அணைந்த பின்பு கூட
விழிகளின் விளக்குகள்
இன்னும் அணையவில்லை
ஏனடி அன்பே ?
விழித்திரையில் உனது விம்பம்
மறைய மறுப்பதாலா ?
இரவின் நீளம் மாறவில்லை ஆனால்
உறக்கத்தின் நீளம் குறைவது
ஏன் அன்பே ?
இப்படி விடை தெரியாத கேள்விகளுடன்
தனிமையின் இரவு விடியலை
காணும் வரை நகர்கிறது
Comments
Post a Comment