Posts

Showing posts from February, 2011

கனவில் காதல்

உன் விழிகள் உறங்கலாம்  இதழ்கள் உறங்கலாம் காது மடல்கள் உறங்கலாம் கை விரல்கள் உறங்கலாம் ஏன் உன் கூந்தல் கூட உறங்கலாம் ஆனால் உன் கனவு உறங்காது  கனவில் நாம் கொள்ளும் காதல் உறங்காது கனவில் நாம் கொள்ளும் அணைப்பு உறங்காது கனவில் நாம் இடும் முத்தம் உறங்காது கனவில் முகத்தை வருடும் கூந்தல் உறங்காது அழகே இமை என்னும் பூட்டை இப்போதே திறக்காதே  உன் கனவு இல்லை நாம் காதல் கலைந்து விடும்

ஒரு வரி கவிதை

விடியல் இல்லாத உறக்கம் - மரணம்   அமைதியான இருட்டறையில் இருந்து அமைதியற்ற உலகத்திற்கு - ஜனனம்   வானையும் மண்ணையும் இணைக்கும் நூல் - மழை   விரசம் இல்லாத தொடுகை - நட்பு    

காவலன்

காதோரும் மெல்லிசை கழுத்து வரை கம்பளம் கூந்தலுக்கிடையே விரலை நீட்டும்  காற்றுடன் தொடங்கும் உன் பயணத்தில் பேருந்து மெல்லென தாலாட்ட உன் விழிகள் இமைக்குள் ஒழிந்திட பகலவன் உன் முகம் கண்டு சிரிக்கும் வரை இரவு உனக்கு காவலனாக இருக்கட்டும் 

காதலித்து பார்

நீண்டகால நட்பை தொலைப்பதும் காதல் எட்டி பார்க்கும் நட்பை   வெட்டுவதும் காதல் காதலித்து பார் காமம் துளிர் விடும் நட்பு விடைபெறும் காதல் என்றால் அன்பாம் நட்பு என்றால் ? யோசித்து சொல் உன் காதலுக்கு சற்று ஓய்வு கொடுத்து  

யார் செய்த பாவம்

சிரத்திலோ இனும் மாறாத ஆழமான காயம் கையிலோ என்றுமே மாறாத வடு ஈன்ற தாயும் ஓடி விளையாடிய தங்காவும் இன்றோ வதை முகாமில் ஆசை தந்தை இறப்பதை கண்டும் ஒன்றுமே செய்ய முடியா பிஞ்சு மனம் நெஞ்சிலோ ஆயிரம் பாரம் !  கண்களிலோ கல்வியில் ஆர்வம் ! இத்தனையும் கண்டேன் அந்த இளம் சிறுவனிடம் 

செல் போன்

விடிந்த உடன் உனது எஸ்.எம்.எஸ் தேடும் கண் இமை போர்வையை பாதி திறந்த கண்கள் ரிங் பண்ணும் போதெல்லாம் அழைப்பது நீயாக இருக்ககூடாத என என்னும் மனம்  உனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணும் போது மட்டும் விரல்  நுனிகளுக்கு ஏன் இத்தனை சந்தோசம் நெடு நேரம் உன்னுடன் கதைக்கும் போது செல்போன்  செய்யும் செல்ல குறும்பு செவிகளை சூடேற்றுவது  ஜொள்ளு விட்டது போதும் என்று  உன்னை திட்டியதுக்கும்  கொஞ்சியதுக்கும் சாட்சி கீ பேட் மட்டும் தான்

இதுவும் கடந்து போகும்

வலிகள் மிகுந்த நாட்கள் எதிர்பாரத மாற்றங்கள் உள்ளத்தில் ஆயிரம் ரணங்கள் ஆறுதல் சொல்ல ஒரு நாதியும் இல்லை இதற்கு மேல் எழுத வார்த்தையும் இல்லை இருந்தும் ஒரு வார்த்தை இதுவும் கடந்து போகும்

புரிதல் இல்லாத நட்பு

புரிதல் இல்லாத நட்பு புரிந்து கொள்ளாத நண்பன் சிந்தித்து பேச முடியாதவன் நட்பை புண்படுத்தும் தோழன் இத்தனை குணங்களும் இருந்தும் தோழியே இவனை ஏன் நண்பனாக்கினாய்  

தாலாட்டும் நினைவுகள்

அவள் இமை மூடி திறக்கும் ஒவ்வொரு கணமும் என் மனம் கோடையிலும் குளிர்ந்தது அவள் பேசும் ஒவ்வொரு சொல்லும் என் செவியில் இசையாய் தளம் போடுகின்றன அவள் விரல் தொடும் ஒவ்வொரு ஸ்பரிசமும் என் உயிரணுக்கள் புது உயிர் பெறுகின்றன மழை ஓய்ந்தும் சாரல் ஓயாதது போல் அவளை நாளை காணும் வரை அவள் நினைவுகள் எனது இரவை தாலாட்டும்  

காதல் எனும் விஷம்

காற்றடைத்த மனசு தெக்கு தெச மாறி போக  அத கயிறு போட்டு இழுத்தவளே சந்திக்கும்போது சிரிச்சே கொன்னியடி பாவி மனசுக்குள்ள காதல் எனும் வெஷத்தை வெத்திச்சியடி அறிவுகெட்ட மனசும் ஒன்ன சுத்தி சுத்தி வந்திசேயடி ஓமனசில நா இல்லேன்னு ஏபுத்திக்கு புரியலயேடி நீ குடுத்த மொத பரிசு மட்டும் ஏகிட்ட இருக்க மொத கடலை குடுத்த நீயோ தனிமையாக்கிபோட்டியேயடி வலிக்குதடி நெதமும் நெனச்சா நெஞ்சு வலிக்குதடி ஒ சிரிப்பு ஒ பாசம் ஒ குறும்பு ஒ பேச்சு ஒ வெக்கம் போதுமடி என்னை அணு அணுவை கொல்ல  

நானும் மனுசனே புத்தன் அல்ல

விஷயம் அறியாமல் வசை பாடினேன் என்றார்கள்  அவளின் உணர்வுகள் தெரியாமல் நான் வார்த்தைகளை உமிழ்ந்தேன் என்றார்கள் அங்கொன்று இங்கொன்று கோர்த்து திரித்து பேசுகிறேன் என்றார்கள் வெறுக்காதே அன்பு செய் என்று கருத்தும் கூறினார்கள் அவள் இயல்பாக இல்லை என்று சொன்னால் இது என் விபரீத கற்பனை  என்றார்கள் திடீர் விலகல் திடீர் மௌனம் திடீர் அசாதாரண நடத்தைகள் எங்கனம் என் மனம் பொறுக்கும் நானும் மனுசனே புத்தன் அல்ல

சில்லென ஒரு நிலவு

காலைநேரம் கடல்கரை சாலை ஓரம் பேருந்தில் வந்திறங்கியது சில்லென ஒரு நிலவு என் விழி மூடி மூடாமல் அவளை ரசித்தன மெதுவாக என்னருகில் வந்து சிரித்தால் கடல் காற்று கூட குளிர்ந்தது அவள் புன்னகையால் முகத்தில் கலைந்த கூந்தலை காது மடலில் சொருகும் அழகை பார்த்து சொக்கி போனது எனது உள்ளம் நடந்தோம் சில தூரம் உள்ளங்கள் மகிழ கவலைகள் மறந்து பிரிந்தோம் சிறு நேரத்தில் சிந்திப்போம் எண்ணத்தோடு  

யார் தவறு

ஏன் நாம் சந்தித்தோம்  ஏன் நாம் பழகினோம் பிரிவோம் என்று தெரிந்தும் உன்னை ஏன் மணக்க நினைத்தேன் நான் நினைத்ததும் தவறில்லை நீ மறுத்ததிலும் தவறில்லை யார் தவறு என்பதை காலம் அறியும்

வினையான குறும்பு

குறும்பாக என் வாயால் விழுந்த வார்த்தை அவளின்  பிஞ்சு மனதை சுட்டது ஒரு கணம் அதிர்ந்தாள்  குழம்பினாள் சொன்ன வார்த்தை குறும்பென்று தெரியாமல் இதை தெரிந்த என் மனமோ துடித்தது ஏன் அவள் புரியவில்லை நான் செய்த குறும்பை நான்  என்னையே வெறுத்தேன் இனியும் செய்யேன் அவளை புண்படுத்தும் குறும்பை அவள் மறந்தாலும் நான் மறவேன் தவமின்றி கிடைத்த அவளின் நட்பை  

முதல் முத்தம்

என்னவளின் இதய துடிப்பு எப்படி என் செவி கேட்டது அவளின் மூச்சு காற்று எப்படி என் உடம்பை சூடாக்கியது என் கை விரல் மரக்கட்டை போல விறைத்து கெடக்கு இமைக்குள் என் விழிகள் எப்படி சொர்கத்துக்கு சென்றது இவை என்றும் மறவா நினைவில் உள்ள என்னவளின் முதல் இதழ் முத்தம் அனுபவம்  

காதல் வலி

நெடு நாள் பழகியும் உணராத வலி  இன்று  மட்டும் ஏன் உணர்தேன் இன்று மட்டும் ஏன் நடு நிசியிலும் இமை மூட மறந்தும் உன் பெயரை வாசிக்கும் விழிகள் இப்போவே உன்னோடு உரையாட இன்று  மட்டும் ஏன் இரவு இப்போதே விடியல் ஆகக்கூடாது மனமே இன்றே சொல்லி விடு அவளை கை கோர்த்து கை ரேகை மறையும் வரையும் வரை இறுக பற்றுவேன் என்று

முதல் ஸ்பரிசம்

அந்தி வானம் தன் இரவு உடைக்கு மாறும் நேரம் எதோ ஒரு உணர்வு என் மூச்சு குழல் வழியாக இதயத்தை திறந்து என் இதயத்துடிப்பின் வேகத்தை கூட்டியது ஆம், அது என்னவளின் தாமரை கையின் மெல்லிய ஸ்பரிசம்

முதல் காதல்

எங்கனம் மறப்பேன் உன் நட்பை  எங்கனம் மறப்பேன் உன்னுடன் நடந்த பாதையை எங்கனம் மறப்பேன் உன்னுடன் நான் கொண்ட வன்மத்தை எங்கனம் மறப்பேன் உன்னுடன் நான் மட்டும் கொண்ட காதலை 

ஊமைக்காதல்

பக்கத்தில் இருந்தும் தோணவில்லை  அடிக்கடி கதைத்தும் சொல்லவில்லை உனக்குள் நான் இருப்பதை நான் ஏன் உணரவில்லை நீ பிரியும் வரை ஏன் என் மனம் ஊமையாய் கிடக்கு

பூங்காவில் அறுபது நிமிடம்

அந்தி சாயும் நேரம் என்னவளின் வருகையை  விழி மூடி மூடாமல் தேடியது கண்கள் மனதை மெல்லென வருடியது அவளின் வழமையான வாசனை அவள் என் அருகில் அமர்ந்ததும் ஆணுக்குள்ளும் பெண்மை உண்டென்பதை உணர்தேன் அடிவானம் கூட அவளின் அவருகையால் சிவந்தது கடிகாரத்துக்கு மட்டும் ஏன் இத்துனை அவசரம் அறுபது நிமிடத்தை அறுபது நொடியில் கடந்தது ஏன் ? மீண்டும் அவளை பிரிந்தேன் என் மனதில் அல்ல இந்த பூங்காவில்

இரவு போர்வை

அன்பே உன்னுடன் இருக்கும் போது சேமித்த வெப்பம் இந்த குளிர் இரவில் என் போர்வையாக கூடாதா

தூரம்

உன் உயிர் நண்பனுக்கும் என் நட்புக்கும் தூரம் அதிகம் உன் நிறத்துக்கும் என் நிறத்துக்கும் தூரம் அதிகம் உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் தூரம் அதிகம் உன் கரம் சேர துடிக்கும் என் கரத்தின் தூரம் அதிகம் அழகே , என்னை உன் காதலனாக்கி விடு உன்னை என் மனைவியாக்கும் தூரம் தொலைவிலில் இல்லை

கனவு

விழிகளில் உறங்கினாய் கனவினில் விழித்தாய்  விடியலில் தொலைந்தாய்  நிஜத்தில் எப்போதடி வருவாய்

பரிசு பொருள்

நீ எனக்காக தந்தந்தை ஒவ்வொரு நாளும் அணியும் போதும் ஒரு கணம்  வந்து போனாயே கண் முன்னே  இதே உணர்வு நீ அணியும் போதும் வந்ததா நாம் பேசுவதை நிறுத்தினாலும் நமது பரிசு பொருளாவது நம்மை பேசவைக்கும் 

தேவை

எதற்க்கும் ஒரு தேவை இருப்பது உண்மை கல்வியின் தேவை பணத்தின் தேவை காதலின் தேவை காமத்தின் தேவை நட்பின் தேவை  தேடலின் தேவை பிரிவின் தேவை இருந்தும் என் தேவை ஒரு உயிர் தோழி

கள்ளி

உன்னை பார்க்காமல் நிலவு இருட்டாகிட்டு  உன்னோடு பேசாமல் பூக்கள் ஊமையாகிட்டு  உன்னோடு நடக்காமல் சூரியன் ஊனமாகிட்டு  இயற்கையே உன்னை மாற்றிய அந்த  கள்ளியை வரச்சொல் என்னை திருடிச்செல்ல! 

பொல்லாத மனம்

அட போடா மனமே மறக்கமாட்டாய பழைய நினைவை அழிக்க அழிப்பான் இல்லையே விளங்கமாட்டாய புத்தி சொல்ல பக்கத்தில் நண்பனும் இல்லையே புரிந்துகொள்ளமாட்டாய நடப்பவை நல்லதுக்கே என்று   யோசிக்கமாட்டாய நான் இன்னும் வாழ வேண்டும் என்று  

இரு வரி கவி

இமை என்னும் மூடிய திரையில் கண்கள் மட்டும் காணும் காட்சி -  கனவு   இரவு என்னும் போர்வையில்  ஒட்டிக்கொண்ட மின்மினி பூச்சி  -  நட்சத்திரம் வானத்து பறவை ஓய்வெடுக்க  கட்டப்பட்ட அசையும் மெத்தை -  மேகம்

பிச்சை வம்சம்

கல்விக்கும் கலவிக்கும் இடையே  ஒரு புள்ளி தூரம்  நான் பிறக்க அடையாளமாக  இருந்தவனுக்கு அறிவு  வெகு தூரம்  தெருவில் போடும் பிச்சை இனி நமக்கு எட்டா தூரம்  இனியாவது கல்வியோடு  கலவி செய் நமது பிச்சை வம்சம்  என்னோடு ஒழியட்டும்

வண்டு

கதிரவனை கண்ட பூக்கள் எல்லாம்  தன் இதழ்களை விரித்து சிரித்துகொண்டிருக்க   ஒரு பூ மட்டும் காம்பு எனும் கட்டிலில்  இதழ் எனும் போர்வைக்குள் இன்னும் உறக்கம்  அவள் முகம் காண தவம் கிடந்த வண்டு  இதழை திறந்து மெதுவாக உள்ளே சென்றது   வெண்ணிலவின் ஒளியும் மல்லிகையின் வாசமும்  ஒருங்கே சேர்ந்த தன்னவளின்  அமைதியான உறக்கத்தை ரசித்த வண்டு  ஓசை எழுப்பாமல் பறந்து சென்றது 

நான் கண்ட காதல்

மழை ஓய்ந்த பின் உள்ள தெளிவான வானம்  போல் அவளின் முகத்தில் அப்படி ஒரு குளிர்ச்சி  அவள் சிரிப்பில் விழும் கன்னக்குழியில்  விழுந்தவர்கள் பல பேர் இருக்கலாம் ஆனால் எழ முடியாத அளவுக்கு விழுந்தவன் நானாக இருப்பேன்  நாம் கொண்ட செல்ல சண்டைகள் எல்லை மீரா தீண்டல்கள்  கெஞ்சலான கொஞ்சல்கள் தான் எத்தனை இந்த காதல் இப்படியே நீள கூடாத  உயிர் போகும் வரை என் மடி உன் தலையணையாக  இருக்க வேண்டும் என் விரலால் உன் கூந்தல் வருட வேண்டும் 

வாழ்க்கை

நெடும்தூர பயணம் தனிமையில் இரு பாதங்கள் முள் தரும் வலியோடும் கல் தரும் காயத்தோடும் பூ தரும் சுகத்தோடும் நதி தரும் வருடலோடும் காலங்கள் நகர்ந்தன சேர்ந்து போக ஜோடி பாதம் வந்தது ஒருமித்த கருத்து ஒரே நோக்கம் இரு ஜோடியை நட்பாய் மாற்றியது இப்படி ஒரு நட்பா என வியந்தவர் பலர் பொறாமை கொண்டோர் சிலர் கண் பட்டதா? கருத்து வேறுபட்டதா? முறித்து கொண்டது நட்பை  பயணம் முடிய வெகுநாள் உண்டு  அதுவரை எதுவும் நிரந்தரம் இல்லை என் இதை வாசிக்கும் நீ கூடத்தா ன்!

சிறையான வார்த்தை

நம் இருவர் மனசும் அறியும் நம் இருவர் கண்களுக்கும் தெரியும்  நம் பரிமாறும் ஒவ்வொரு சொல்லிலும் கலந்திருக்கும் நம் இருவர் உதடு மட்டும் சொல்ல விடாமல்  தொண்டைக்குழிக்குள் சிறை வைத்திருக்கும் வார்த்தை  "உன்னோடு நான் மட்டும் வாழவேண்டும்"

பசுமை நினைவு

மலை போல் கற்பாறையில்  ஒளிந்து விளையடினோமே  தலையணைக்காக பஞ்சு மரம் மேல் கல் எறிந்தோமே அம்மாவுக்கு தெரியாமல் மரக்குச்சியில் புகை பிடித்தோமே  பள்ளி பஸ் பிடிக்க தொலை தூரம் வலி தெரியாமல் நடந்தோமே ஓடையில் நீராடி தோட்டத்தில்  களவாய் மாங்காய் திரிடினோமே  கலவரத்தில் உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்தோமே எப்படி மறக்கும் என் மனம்  அந்த பசுமை நினைவை 

இறுக்கமான முகம்

இறுக்கமான முகம்  தொடர்கதையான தோல்வியால்  இறுக்கமான முகம்  சந்தர்பவாதியான நண்பனால்  இறுக்கமான முகம்  ஆசைபட்டவை நிராசையால் இறுக்கமான முகம்  தனிமையான நினைவால்  இறுக்கமான முகமே  மலர்ந்து விடு மரணிக்கும் வரை 

நான் விரும்பும் காதலி

நான் உன் விழியை காதலிக்கவில்லை  விழி அசைவை காதலித்தேன்  நான் உன் இதழை காதலிக்கவில்லை  உன் இதழ் சுழிப்பை காதலித்தேன்  நான் உன் கன்னத்தை காதலிக்கவில்லை  உன் கன்னத்துக்குழியை காதலித்தேன்  நான் உன் இமையை காதலிக்கவில்லை  உன் இமையை மறைக்கும் கண்ணாடியை காதலித்தேன்  உன் ஐவிரலை காதலிக்கவில்லை  என்னை தொட்ட விரலை காதலித்தேன்    உன் அழகை காதலிக்கவில்லை  உன் அன்பை காதலித்தேன்  உன் உடம்பை காதலிக்கவில்லை  உன் உயிரை காதலித்தேன் என் உயிர் போகும் வரை  என் காதல் உன்னோடு மட்டும் தான் அன்பே

அனுமதிப்பாயா ?

நீ தூங்கும் நேரம் உன் மூச்சு காற்றை சுவாசிக்க அனுமதிப்பாயா ? கனவிலாவது உன்னை காதலிக்க  அனுமதிப்பாயா ? தூக்கம் கலைகையில் உன் சிணுங்கலை செவிசாய்க்க அனுமதிப்பாயா ? கலைந்து விழும் கூந்தலை உன் காது மடலில் சொருகிவிட அனுமதிப்பாயா ? என் மீதி வாழ்க்கை உன் இதய கூட்டில்  வாழ அனுமதிப்பாயா ?